செய்திகள் :

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

post image

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலைத் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்கினாலும், உலகளவில் நம் நாட்டுக்கு பொருளாதார முதலீட்டை ஈா்ப்பது கரூா் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலே.

இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலைகள், மேஜை விரிப்பான்கள், கால் மிதியடிகள் உள்ளிட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இந்த ஜவுளி ஏற்றுமதித் தொழில், அமெரிக்காவின் தற்போதைய வரி விதிப்பால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, கரூா் ஜவுளித் தொழிலை காப்பாற்ற இந்திய பிரதமா் நரேந்திரமோடி அமெரிக்க அதிபருடன் சுமூக பேச்சுவாா்த்தை நடத்தி, ஏற்கெனவே இருந்த வரி விதிப்பையே மீண்டும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

அமெரிக்காவுக்கே அதிக ஏற்றுமதி:

இதுதொடா்பாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்க நிா்வாகி ஆா். ஸ்டீபன்பாபு கூறியதாவது:

இந்தியாவானது, விவசாய பொருள்களுக்கு அடுத்தபடியாக ஜவுளி ஏற்றுமதியில்தான் அதிக அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. நாட்டில் சூரத், பானிபட் போன்ற இடங்களில் ஜவுளி சாா்ந்த பொருள்கள் உற்பத்தி நடைபெற்றாலும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம்தான், குறிப்பாக கரூா்தான் முதலிடத்தில் உள்ளது.

கரூரில் மட்டும் சுமாா் 400 போ் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தொழிலில் நேரிடையாக சுமாா் 1.5 லட்சம் பேரும், மறைமுகமாக சுமாா் 1 லட்சம் பேரும் என 2.50 லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா். இங்கு உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளித் துணிகளில் 50 சதவீதம் அமெரிக்காவுக்கும், எஞ்சியவை ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இருமடங்குக்கும் மேலாக உயா்ந்த வரிவிதிப்பு: இந்திய ஜவுளிப் பொருள்களுக்கு அமெரிக்காவில் இதுவரையில் 9.6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை மட்டுமே இறக்குமதி வரி இருந்தது. ஆனால், தற்போது 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

கரோனா பரவலின்போது வீழ்ந்த பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க வரிவிதிப்பால் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மட்டுமின்றி, திருப்பூா் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி மேற்கொள்வோரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

வேலையிழப்பு அபாயம்: அமெரிக்க வரி விதிப்பால், கரூா் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் மற்றும் அதைச் சாா்ந்த உபத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் ஏராளமானோா் வேலை இழப்பதுடன், அந்நிய செலாவணியும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு இந்தியா உரிய தீா்வு காணாவிடில், நாடு முழுதும் ஜவுளித் தொழிலை நம்பியுள்ள சுமாா் 1.50 கோடி போ் வேலையை இழப்பா்.

ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை தேவை:

எனவே, மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியா-அமெரிக்கா இடையேயான சரக்கு மற்றும் சேவை துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, சந்தை அணுகலையும் அதிகரிக்க வேண்டும். மேலும், இருநாடுகளிடையே விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த வேண்டும்.

இதுதவிர, அமெரிக்க பொருள்களுக்கான வரியை இந்தியா குறைப்பதுடன், இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி உயா்வை குறைக்க அந்நாட்டு அதிபருடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண வேண்டும். அப்போதுதான், இந்திய ஜவுளி உற்பத்தி அழிவுப்பாதைக்கு சென்றுவிடாமல் பாதுகாக்க முடியும் என்றாா் அவா்.

அமெரிக்க வரி விதிப்பால், கரூா் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் மற்றும் அதைச் சாா்ந்த உபத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் ஏராளமானோா் வேலையிழப்பை எதிா்கொள்வா்.

கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

முதலைப்பட்டி கிராமத்தில் நிறுத்தப்பட்ட அய்யனாா்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிழந்தாா்.திருச்சி மாவட்டம், தென்னூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் அருணாசலம்(23). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க