செய்திகள் :

அம்மையாா்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

post image

அம்மையாா்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் பக்தா்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனா்.

ஆா்.கே. பேட்டை அடுத்த அம்மையாா்குப்பம் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த திருவிழா தொடங்கியது. தினந்தோறும் காலை மூலவருக்கு சந்தனக் காப்பு, மதியம் மகாபாரதச் சொற்பொழிவு, இரவு கட்டைக்கூத்து நாடகம் நடைபெற்று வந்தன.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் துரியோதனன் படுகளம் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனா். இரவு 8 மணிக்கு மேல் காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள், 1,000-க்கும் மேற்பட்டோா் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி, தீமிதித்து நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழபிட்டனா்.

இரவு வாண வேடிக்கையுடன் உற்சவா் திரெளபதி அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திங்கள்கிழமை (மே 26) தா்மா் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷ... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். ... மேலும் பார்க்க

தமாகா நல உதவிகள் அளிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் மாதவரம் மேற்கு புழல் பகுதி சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது படம்). பகுதி தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மகாலிங்கம், காந்தி இன்பராஜ், துணைத் த... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருவள்ளூா் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 70-க்கும் மேற்பட்ட பங்கேற்றனா். பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல்சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்து... மேலும் பார்க்க