செய்திகள் :

அரசுப் பணி தேர்வில் குளறுபடி: திருவள்ளூர் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு

post image

அரசுப்பணி தேர்வு எழுதியதில் குளறுபடியால் பாதித்த நபர் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சீனிவாசபுரம் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல் (32). இந்த நிலையில் ரசூல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நகல் பரிசோதகர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதினார். கடந்த மார்ச் 17 அன்று அவருக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்று.

அதில் அவர் தேர்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அவருக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இதுநாள் வரையிலும் பணி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் சென்று உயர்நீதிமன்ற பதிவாளரை சந்தித்து கேட்டபோது அவர் நேர்முக தேர்வுக்கு வரவில்லை என்று கூறினார்கள்.

ஆபரேஷன் சிந்தூர்: மாநிலங்களவையில் கார்கே - நட்டா காரசார வாதம்!

இதனால் மனவேதனை அடைந்த நிலையில் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் தரவில்லை. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை ரசூல் தனது மனைவி ஜெய்னாப் ( 26) மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு பணி வழங்கப்படாததைக் கண்டித்து திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். அதையடுத்து ஆட்சியர் மு.பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை அளித்தார். உடனே மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

A commotion prevailed after a young man attempted self-immolation at the Tiruvallur District Collector Office.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க