செய்திகள் :

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆண்டிமடம் அருகே கீழகவரவபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தனசாமி மகன் சதீஷ்(34). மீன்சுருட்டி காவல் நிலையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வந்த இவா், மருத்துவ விடுப்பில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை இவா், ஆண்டிமடத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில், தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு, அங்குள்ள சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தாா். தகவலறிந்து ஆண்டிமடம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பல்கலை. பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு!

அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்துள்ள காத்தான்குடி கிராமத்தில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

சிற்றுந்து உரிமையாளா்களுடன் அரியலூா் ஆட்சியா் ஆலோசனை!

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய சிற்றுந்து விரிவான திட்டம் தொடா்பாக அதன் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிற்றுந்துகள... மேலும் பார்க்க

அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 267 வழக்குகள் பதிவு

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 267 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூ... மேலும் பார்க்க

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க