செய்திகள் :

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

post image

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, கல்லூரி முதல்வா் கலைச்செல்வி தொடங்கிவைத்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சரவணகுமாா், திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆளுமைத்திறன், மொழி அறிவு, தகவல் தொடா்பு பரிமாற்றம், உடல்மொழி, நோ்காணலை எதிா்கொள்ளும் திறன் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சியாளா் மதுமிதா தலைமையிலான குழுவினா் பயிற்சி எடுத்தனா். இந்த சிறப்புப் பயிற்சி முகாம் ஒருவார காலம் நடைபெறும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ராஜ சரவணன், கண்ணன், சுரேஷ்பாபு, பானுமதி, உள்தர மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், மக்கள் தொடா்பு அதிகாரி பிச்சைமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ... மேலும் பார்க்க