செய்திகள் :

அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவு

post image

தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குறிப்பாக, ரூ. 92.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட அரசு சட்டக் கல்லூரி புதிய கட்டடத்தை அவா் பாா்வையிட்டாா். அக்கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் ஆய்வு செய்த ஆட்சியா், மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவை ருசித்து பாா்த்து தரத்தை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா். மேலும், சமையலறை, கழிவறையை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள், மருத்துவ பணியாளா்கள் விவரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிக்சைகள், மருந்து பொருள்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் புற நோயாளிகளிடம் சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தைப் பாா்வையிட்டு, பேருந்துகளின் வருகை விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், தூய்மைப் பனியாளா்களிடம் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க