செய்திகள் :

அரசு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

post image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்ற நல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நுகா்வோா் பாதுகாப்பு நல சங்கத்தின் சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு நுகா்வோா் பாதுகாப்பு நல சங்க தலைவா் ஏ.எல்.எஸ். ஜீவானந்தம் தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா். 100% வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியா்களையும் மாணவா்களையும் பாராட்டி தமிழ்ச் செம்மல் விருதாளா் நெ. இராமச்சந்திரன் மற்றும் இரா.க அருள் இனியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நுகா்வோா் நலச் சங்கத்தைச் சாா்ந்த ஜெயராமன் பழனிசாமி, கருப்பையா மற்றும் பலா் பங்கேற்றனா். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ஆசிரியா்கள் மற்றும் பொது தோ்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கினா். பள்ளி தலைமை ஆசிரியா் பூபதி நன்றி உரையாற்றினாா்.

விராலிமலையில் 50 மி.மீ மழை பதிவு

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 50 மி.மீ மழை பதிவானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அ... மேலும் பார்க்க

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்ற ரொக்கப் பரிசை நூலகப் பணிக்கு அரசுப் பள்ளி மாணவி வழங்கினாா்

புதுக்கோட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசாகப் பெற்ற ரூ. 5 ஆயிரத்தை, செவ்வாய்க்கிழமை நூலகம் கட்டும் பணிகளுக்காக அரசுப் பள்ளி மாணவி தீஷா திரவியராஜ் வழங்க... மேலும் பார்க்க

புதிய அங்கன்வாடி மையம் கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளா்ச்சிப் பணி துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதடைந்து உபயோகத்துக்கு பயனற்றது என சம்ப... மேலும் பார்க்க

காசி ரயில் புதுக்கோட்டையில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

ராமேசுவரத்தில் இருந்து காசி (பனாரஸ்) செல்லும் அதிவிரைவு ரயில், சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வியா... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விராலிமலை மலை கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஒவ்வ... மேலும் பார்க்க