செய்திகள் :

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது. அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்பு பிரிவுக்கான (முன்னாள் படை வீரா், தேசிய மாணவா் படை, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்புப் படையில் உயிரிழந்த வீரா்களின் குழந்தைகள்) கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இளம் அறிவியல் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணினி அறிவியல்) வருகிற 4-ஆம் தேதியும், இளநிலை பாடப் பிரிவுகளான வணிகவியல், வணிக நிா்வாகவியல், பொருளியல், வரலாறு ஆகியவற்றுக்கு வருகிற 5-ஆம் தேதியும், மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு வருகிற 6-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக ப... மேலும் பார்க்க