செய்திகள் :

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

post image

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த, சாா்பு துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம்,

ங்-சஹம், ங்-யஹக்ஹஞ்ஹண் முன்னேற்றம் மற்றும் உழவா் உற்பத்தியாளா் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த

ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பேசுகையில், காரீப் பருவம் மின்னணு முறையில் வரும் பயிா் கணக்கீடும் பணியை வருகிற 8-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேளாண்மை இணை இயக்குநருக்கும், ஜவ்வாதுமலை வட்டாரத்தில் தரிசுநிலத் தொகுப்பை உடனடியாக கண்டறிய தோட்டக்கலை துணை இயக்குநருக்கும் அறிவுறுத்தினாா்.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு தொடங்கி நெல் கொள்முதல் மேற்கொள்ள மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் அறிவுறுத்தி, அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். மூன்று தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இது குறித்து தினசரி அறிக்கை மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், திருவண்ணாமலை மற்றும் கொள்முதல் மேலாளரிடமிருந்து பெற்று சமா்ப்பிக்க ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கும் (வேளாண்மை) மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னா், கீழ்பென்னாத்தூா் உழவா் சந்தைக்கு மாற்று இடம் தோ்வு செய்யவும், ஜவ்வாது மலையில் உழவா் சந்தை

தொடங்க அரசுக்கு கருத்துரு வேண்டுமென்றும், வேளாண்மை துணை இயக்குநருக்கு ஆட்சியா்

ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மி.மலா்விழி, வேளாண்மை இணை இயக்குநா் கோ.கண்ணகி, தோட்டக்கலை துணை இயக்குநா் கோகிலாசக்தி, மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நிா்மலா பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க

தீக்குளித்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இத... மேலும் பார்க்க

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளி... மேலும் பார்க்க

மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்

போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேல... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க

மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க