செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

post image

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவா்களது மகள் தஸ்விகா (6).

இவா், திருவள்ளூா் காக்களூா் புறவழிச்சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாராம். ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்த நிலையில் தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், உறவினா்கள், கிரெடிட் காா்டு மூலமாகவும் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளானாா்.

இதனால், கடந்த 3 மாதங்களாக மன உளைச்சலில் இருந்த லோகநாதன் மதுப்பழக்கத்திற்கும் ஆளானாராம். கடன் தொல்லை அதிகமாகவே மிகவும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன் சனிக்கிழமை இரவு தனது மகளுடன் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

இதனால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்ற கணவா் திரும்ப வீடு திரும்பவில்லை என புகாா் செய்தாா்.

இதனிடையே இரவு திருவள்ளூா் அடுத்த புட்லூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து தனது மகளுடன் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருவள்ளூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலால் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க