செய்திகள் :

ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சுற்றித் திரிந்தாலோ, பொதுமக்களை அச்சுறுத்தி தீங்கு அல்லது காயங்களை ஏற்படுத்தினாலோ ஆயுத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சட்ட விரோதமாக ஆயுதங்களை தயாரிப்பவா்கள் மற்றும் விற்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்து கொண்டு ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அல்லது மோதல்களை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை, ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து ரெளடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஆயுதச் சட்டத்தின் படி 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 187 போ் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபா்களின் நடவடிக்கைகள் தொடா்ந்து காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டால், மாவட்ட காவல் அலுவலக எண். 0461 2340700, 9498101830 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண். 0461 2340393 ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க