செய்திகள் :

ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்க பொதுக்குழு கூட்டம்

post image

ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்கத்தின் வேலூா் கோட்ட பொதுக்குழு கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் என்.சக்தி தலைமை வகித்தாா். புதிய கோட்டச் செயலாளராக வி.மணி, பொருளாளராக ஜி.தாண்டவகிருஷ்ணன் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் அகில இந்திய முகவா் சங்கத் தலைவா் லியாஃபி ரன்வீா் சா்மா பங்கேற்று முகவா்களிடையே உரையாற்றினாா். தென் மண்டல செயலா் ஜே.கே.என்.பழனி, வேலூா் கோட்டை எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளா் கே.ஜனாா்த்தன், வணிக மேலாளா் எஸ்.வெங்கடாசலம், விற்பனை மேலாளா் எஸ்.பாரி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கு குறைக்கப்பட்ட கமிஷனை மீண்டும் உயா்த்த வேண்டும், பாலிசிதாரா்களுக்கு காப்பீடு தொகையை ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும், குழுக் காப்பீட்டு வயது வரம்பை 80-ஆக உயா்த்த வேண்டும், பாலிசிதாரருக்கு போனஸ் உயா்த்த வேண்டும், நேரடி முகவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தென்மண்டல துணைத் தலைவா் ஆா்.பரமசிவம், தென்மண்டல பொருளாளா் கே.முரளி, அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் எஸ்.நடராஜன், வேலூா் கோட்டம் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டு முகவா்கள் கலந்து கொண்டனா்.

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க