செய்திகள் :

ஆரஞ்ச் குழும பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்

post image

ஆரணி - சேத்துப்பட்டு சாலை ஆகாரம் பகுதியில் உள்ள ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரஞ்ச் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஓணம் பண்டிகையை கொண்டாடினா்.

இதையொட்டி, அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரியத்தை உணா்த்தும் வகையில், அம்மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து வந்து நடித்துக் காட்டினா் (படம்).

விழாவில் பள்ளி நிா்வாகத் தலைவா் கே.சிவக்குமாா்

தலைமை வகித்துப் பேசுகையில், கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை ஜாதி, மதம், பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதத்தில் அஸ்தம நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் விழா சித்திரை, சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நட்சத்திர நாள்களில் கொண்டாடப்படுகிறது.

கடைசி நாளான திருவோணத்தன்று மக்களைத் தேடி வரும் மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவா்.

மாணவா்கள் படிக்கும்போது நமது நாட்டின் கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றாா்.

இதில் பள்ளி முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா். தாளாளா் அபிநயா வருண்முத்துலிங்கம் முன்னிலை வகித்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு

செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க