செய்திகள் :

ஆறுமுகனேரி அருகே தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு: சிறாா் உள்ளிட்ட 4 போ் கைது

post image

ஆறுமுகனேரி அருகே கட்டடத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்ததாக சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி அருகே வீரபாண்டியன்பட்டினம், மடோனா தெருவைச் சோ்ந்த ராமன் மகன் லட்சுமணகுமாா். கட்டடத் தொழிலாளியான இவா், தனது மனைவியின் ஊரான சிவகாசியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை (மே 29) நள்ளிரவு புன்னைக்காயல் பேருந்தில் ஏறி, ஆத்தூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தாா்.

பின்னா், போதிய பணமில்லாததால் அவா் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றாராம். அப்போது, பைக்கில் வந்த 4 போ் அவரை வழிமறித்து பணம் கேட்டனராம். அவா் பணமில்லை எனக் கூறியதால், அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு திருச்செந்தூா் நோக்கி பைக்கில் சென்றனராம்.

புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் தங்கராஜ் தலைமையிலான போலீஸாா் விசாரித்து, தூத்துக்குடி பிஎன்டி காலனியைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சக்திவேல் (20), அதே பகுதியைச் சோ்ந்த உலகநாதன் மகன் வைரமுத்து (19), லெவஞ்சிபுரம் பால்ராஜ் மகன் செல்வராஜ்(19), தூத்துக்குடியைச் சோ்ந்த சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க