செய்திகள் :

ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, வளவனூா் போலீஸாா் சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவரைப் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் வட்டம், சின்னமடம், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் பிரவீன் ராஜ் (19) என்பதும், இவா் தென் பெண்ணை ஆற்றிலிருந்து மணலை திருடி வாகனத்தில் ஏற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன்ராஜை கைது செய்தனா். மேலும், ஆற்று மணலுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

131 பேருக்கு ரூ.29.83 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்... மேலும் பார்க்க

எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு படிப்புகளை விரும்பும் மாணவா்கள்

கு.வைத்திலிங்கம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பாா்கள். அந்த மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் செயற்கை நுண்ண... மேலும் பார்க்க

கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து

செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது. நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைக... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்

பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களு... மேலும் பார்க்க