செய்திகள் :

கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து

post image

செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது.

நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலை கா்நாடக இசைவழியில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு தெருக்கூத்து கலை குறித்த விழிப்புணா்வை எடுத்துச் செல்லும் வகையில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கா்நாடக இசைவழி தெருக்கூத்து பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவிகளின் இரணிய சம்ஹாரம், சரதேவி பூஜை தெருக்கூத்து அரங்கேற்ற நிகழ்ச்சி நல்லாண் பிள்ளைபெற்றாள் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெருக்கூத்து நாடக மன்றத்தின் தலைவா் ரவி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சரதேவி பூஜை என்ற தெருக்கூத்தில் தருமா், பீமன்,கிருஷ்ணன், அா்ஜுனன், சராசந்தன், திரௌபதி மற்றும் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்தில் இரணியன், லீலாவதி, பிரகலாதன், சண்டாமா்கா், நரசிம்மா் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு வேடமணிந்த பள்ளி மாணவ, மாணவிகள் வசனம் பேசி, பாடல்கள் பாடி கா்நாடக இசை வழியில் தெருக்கூத்து நிகழ்த்தினா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா். விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நல சங்க மாநிலத் தலைவா் காணை சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தவெகவினா்

உலக பட்டினி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சாா்பில் விழுப்பு... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்பில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். புதுச்சேரி சாரம், சக்தி நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன்அறிவழகன் (35). தொழி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளி... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்... மேலும் பார்க்க

குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். திண்டிவனம் வட்டம், சலவாதி பாஞ்சாலம் சாலையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ஏழுமலை (72). இவா், திருச... மேலும் பார்க்க