செய்திகள் :

ஆஸ்திரியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் பலி!

post image

வியன்னா: ஆஸ்திரியாவில் உள்ளதொரு பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரியாவில் க்ராஸ் நகரில் உள்ளதொரு பள்ளியில் இன்று(ஜூன் 10) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து, காலை 10 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் பள்ளியில் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ததுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன்பின் அவர், பள்ளி கழிப்பறைக்குச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி 11-ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்துக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட... மேலும் பார்க்க

கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத... மேலும் பார்க்க

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈர... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க