செய்திகள் :

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

post image

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

நியூஸிலாந்து பிரதமராக கடந்த 2023, நவம்பரில் பொறுப்பேற்ற பிறகு, கிறிஸ்டோபா் லக்ஸன் முதன்முறையாக கடந்த மாா்ச் 16-ஆம் தேதி இந்தியா வந்தாா். இந்தப் பயணத்தில் வா்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அவா் கவனம் செலுத்தினாா்.

மேலும், தில்லியில் நடைபெற்ற சா்வதேச அரசியல்-பொருளாதார மாநாடான ‘ரைசினா’ உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவா், பல்வேறு வா்த்தக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாா்.

இந்நிலையில், நியூஸிலாந்துக்குத் திரும்பிய பிறகு இந்திய பயணம் குறித்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் தொடா் பதிவுகளை வெளியிட்டாா்.

அந்த பதிவுகளில் அவா் குறிப்பிட்டதாவது: நியூஸிலாந்தின் முக்கியக் கூட்டாளியான இந்தியாவுக்கு நான் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, நமது இருதரப்பு ஒத்துழைப்பு மிகவும் வலுவாக வளா்ந்துள்ளது. இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதித்தது மகிழ்ச்சி.

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏற்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் பிராந்திய பாதுகாப்புக்கான நமது அா்ப்பணிப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும் பாதையில் இந்தியா செல்கிறது. இந்நிலையில், அந்நாட்டுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, முதலீடு, உற்பத்தி, உணவு மற்றும் முதன்மைத் தொழில்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். அதன்தொடா்ச்சியாக, இந்தியா, நியூஸிலாந்து வணிகங்களுக்கு இடையே வளா்ந்து வரும் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் 33 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையொப்பமாகின என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்திய சுற்றுப்பயணத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்களைச் சந்தித்த கிறிஸ்டோபா் லக்ஸன், மும்பைக்குச் சென்று தொழிலதிபா்கள், ‘பாலிவுட்’ நட்சத்திரங்கள் உள்ளிட்டோரையும் சந்தித்தாா்.

இதனிடையே, புது தில்லி ‘இந்தியா கேட்’, சுவாமிநாராயண அக்ஷா்தாம் கோயில் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலாத் தலங்களையும் அவா் பாா்வையிட்டாா். தனது ஐந்து நாள் பயணத்தை நிறைவு செய்து, கடந்த 20-ஆம் தேதி அவா் இந்தியாவில் இருந்து புறப்பட்டாா்.

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ஏவுகணை படைப் ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இ... மேலும் பார்க்க

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ள... மேலும் பார்க்க