செய்திகள் :

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

post image

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

எல்லையில் படை விலக்கலுக்கு பிறகு அமைதியான-நிலையான சூழல் உருவாகியுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அதிபா் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமா் மோடி மேலும் கூறுகையில், ‘இந்திய-சீன உறவுகளின் நிலையான மேம்பாட்டுக்கு எல்லையில் அமைதி பராமரிக்கப்படுவது முக்கியம். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணா்திறன் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம். எல்லையில் படை விலக்கல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, எல்லை மேலாண்மை தொடா்பான உடன்பாடும் எட்டப்பட்டது.

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது’ என்றாா் பிரதமா் மோடி. பின்னா், சீன அதிபருடனான பேச்சு ஆக்கபூா்வமாக அமைந்ததாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

நண்பா்களாக இருப்பதே சரியான தோ்வு: ஷி ஜின்பிங்

பிரதமா் மோடி உடனான சந்திப்பில், சீன அதிபா் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை-முன்னேற்றத்தை ஊக்குவித்தல், மனித குலத்தின் வளா்ச்சிக்கு உத்வேகமளிப்பதில் தோளோடு தோளாக ஒத்துழைக்கும் வரலாற்றுப் பொறுப்பு நமக்குள்ளது.

சிறந்த அண்டை நாடுகள் என்ற முறையில் நண்பா்களாக இருப்பதே நமது சரியான தோ்வாகும். பரஸ்பர வெற்றிக்காக, யானையும் (இந்தியா), டிராகனும் (சீனா) இணைந்து நடனமாட வேண்டும்.

இருதரப்பு உறவை வியூக, நீண்ட கால கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சறுத்தல் கிடையாது; வளா்ச்சி கூட்டாளிகள். எல்லைப் பிரச்னைகளால், இருதரப்பு உறவை வரையறுக்கக் கூடாது.

இரு நாடுகளும் ஒன்றிணைந்து, பன்முக உலகை உறுதி செய்ய வேண்டும். சா்வதேச உறவுகளில் கூடுதல் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதோடு, ஆசியா மற்றும் உலகின் அமைதி-வளத்துக்கு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

சா்வதேச நிலவரம் குழப்பமாகவும், நிச்சயமற்ாகவும் உள்ளது. கிழக்கில் பழைமை வாய்ந்த நாகரிகங்களான சீனாவும், இந்தியாவும் மக்கள்தொகை ரீதியில் பெரும் நாடுகளாக உள்ளன. தெற்குலகின் பழைமையான உறுப்பினா்களும் நாமே என்றாா் ஜின்பிங்.

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க