செய்திகள் :

இன்ஸ்டாவில் பாய் பிரண்டாக பழகி, மாணவியிடம் 60 சவரன் நகையை மோசடி செய்த தோழி..

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் ஒரு ஸ்கூலில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு தயாராகி வருகிறார்.

அவரது தந்தை குளச்சல் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மாணவியின் தாய் பீரோவில் வைத்திருந்த நகைகளில் சுமார் 60 பவுன் நகைகள் மாயமாகியிருப்பதை சில நாள்களுக்கு முன் கண்டுபிடித்தார். இதுபற்றி மகளிடம் கேட்டதற்கு அவர் தனது இன்ஸ்டா காதலனுக்கு கொடுத்ததாக கூறி அழுதுள்ளார்.

இன்ஸ்டா காதலனை எங்கு சந்தித்து நகைகளை கொடுத்தாய் என தந்தை கேட்டுள்ளார். காதலனை நேரில் பார்த்ததில்லை எனவும், தோழி மூலம் நகைகளை கொடுத்தனுப்பியதாக அந்த மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் தோழியின் வீட்டுக்குச் சென்று காதலனைப்பற்றிய விபரங்களை கேட்டனர்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

அவர் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் மாணவியின் பெற்றோர். போலீஸார் விசாரணை நடத்தியதில் மாணவியை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக தோழியே போலியாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கி ஆண் நண்பர் போன்று சாட் செய்து காதலிப்பதுபோன்று நடித்துள்ளதும். பின்னர், மாணவியிடம் இருந்து நகைகளை பறித்தது மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும், போலீஸ் விசாரணைக்கு பயந்து தோழியும், தோழியின் தாயும் விஷம் குடித்தனர். அவர்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "மாணவி 12-ம் வகுப்பு படித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பெண் அவரது வகுப்புத்தோழியாக இருந்தார். மாணவியின் வீட்டினர் வசதியாக இருப்பதும், நிறைய நகைகள் வைத்திருப்பதையும் தோழி அறிந்துகொண்டார். மேலும், மாணவி வீட்டில் இருக்கும் சமயத்தில் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் பார்க்கும் வழக்கம் உள்ளவர் என்பதையும் தெரிந்துகொண்டார்.

இதையடுத்து தனது தாயுன் உதவியுடன் ஆண் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்த போலி இன்ஸ்டா பேஜ் மூலம் மாணவியுடன் சாட் செய்யத்தொடங்கினார்.

இன்ஸ்டா காதல் மோசடி

மாணவியும் அது ஆண் என நினைத்து பழகியதுடன் காதலையும் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே தனக்கு பைக் வாங்க பணம் தேவைப்படுகிறது என கடந்த மார்ச் மாதம் கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்த நகைகளை எடுத்துத்தருவதாக மாணவி கூறியுள்ளார்.

நகைகளை எப்படி தருவது என மாணவி கேட்டதற்கு, 'உனது தோழியை எனக்கு தெரியும். அவரிடம் கொடுத்து அனுப்பு நான் வாங்கிக்கொள்கிறேன்' என சாட் மூலம் தெரிவித்துள்ளார். அந்த மாணவியும் தனது தோழியிடம் நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு காரணங்களைக்கூறி மாணவியிடம் இருந்து 60 சவரன் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார் தோழி. உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் நகைகளை எடுத்துப் பார்த்தபோதுதான், 60 சவரன் நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி மாணவி கூறிய தகவலின் அடிப்படையில், அவரது தந்தை தோழியிடம் கேட்டதற்கு, 'ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாலிபர் ஒருவர் தன்னிடம் நகைகளை வாங்கிச்சென்றதாக கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம்

ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தோழியின் தந்தை சுமார் 15 சவரன் நகைகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த மோசடியில் மாணவியின் தோழியும், தோழியின் தாயும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தங்களின் கடன்களை அடைக்க மாணவியை பயன்படுத்தி பணம் கறக்க முயன்று இவ்வாறு செய்துள்ளனர்.

தோழியும், தாயும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் வீடு திரும்பியதும் விசாரணை நடத்தி நகைகளை மீட்க நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

கடனை அடைக்க போலி இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் நகை பறித்த தோழியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மாண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க