செய்திகள் :

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

post image

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வீடு உள்ளது. எப்போதும் பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு தகவல் வந்தது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

தகவலை அடுத்து அடிப்படையில் சூரமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து அவர் வீடு மற்றும் அந்தத் தெரு பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும், பல்வேறு இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி, வெடிகுண்டு செயலிழப்பு, தடுப்புக் கருவிகள் துணையுடன் நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து இபிஎஸ் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்! மேலும் 6 மாவட்டங்களில் கனமழை!

கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும்(மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்கள... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்கத் தடை

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில... மேலும் பார்க்க

திமுக ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ்

திமுக ஆட்சி முடியும் வரை திமுகவினரிடம் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், காவல் ... மேலும் பார்க்க

கொல்லம் விரைந்தனா் அரக்கோணம் பேரிடா் மீட்புக் குழுவினா்

அரக்கோணம்: கேரள மாநிலம் கொல்லம் கடலோரப்பகுதியில் நீரில் முழ்கிய கப்பல் விபத்து மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையில் இருந்து சிபிஆா்என் எனப்படும் வேதியியல், உயிரியியல், கத... மேலும் பார்க்க

தேசிய பங்குச் சந்தையில் சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி நிதிப் பத்திரங்கள்!

சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி நிதிப் பத்திரங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படு... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கையை இன்னும் வெளியிடாதது ஏன்? எப்போது நடைமுறைக்கு வரும்? - ராமதாஸ்

தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கையை இன்னும் வெளியிடாதது ஏன்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,"தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கீ... மேலும் பார்க்க