செய்திகள் :

இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கருத்து

post image

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இருமுனை கூர் கொண்ட கத்தியாக இருக்கும் என இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் தெரிவித்துள்ளார்.

7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி அசாமின் குவாஹாட்டியில் துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில், அனைத்து அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா சார்பில் இதுவரை 1978, 1997 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை நடத்தப்படவுள்ளது.

இதில், இந்திய அணி 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறுகையில், “உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்பது பழக்கப்பட்ட சூழல், எளிமையாக இருக்கும் எனக் கருதலாம். ஆனால், சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சொந்தமண்ணில் விளையாடுவதால் மெத்தனப் போக்குடன் இருக்கக்கூடாது. உள்ளூர்ப் போட்டிகள் இருமுனை கூர்கொண்ட கத்தியைப் போன்று இருக்கலாம். மற்ற அணிகளும் இப்போது சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடுகின்றன. இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால், 2 முறை இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடியது.

இந்திய அணியில் காலங்காலமாக சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இது இந்திய அணிக்குத்தான் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Home World Cup can be double-edged sword, can't just relax: Former India women's coach

இதையும் படிக்க : நியூசிலாந்து டி20 தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக மிட்செல் மார்ஷ்!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க