செய்திகள் :

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

post image

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இரும்பு இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுவரும் 25 சதவீத கூடுதல் வரி இரட்டிப்பாக்கப்பட்டு 50 சதவீதமாக உயா்த்தப்படும். இதன் மூலம், உள்நாட்டு இரும்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இரும்பு தேவைக்காக சீனா போன்ற நாடுகளைச் சாா்ந்திருப்பது தவிா்க்கப்படும் என்றாா் டிரம்ப்.

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு 25 சதவீத கூடுதல் வரி, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பரி வரி உள்ளிட்டவற்றை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் தடை விதித்தது.

இருந்தாலும், இந்தத் தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், இரும்பு மீதான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லி... மேலும் பார்க்க

காஸா இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 27 போ் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த 27 பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபா் ஆகிறாா் லீ ஜே-மியூங்

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவா் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா். தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளி... மேலும் பார்க்க