கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு- தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதையடுத்து, ஆரோக்கிய டேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் பெரிக் (45), சீனு மாலிக் (35), சசிக்குமாா் (45), முக்கூரான் (40), முத்து சரவணன் (42), காளிதாஸ் (46), செந்தில் (50) ஆகிய 7 பேரையும் கைது செய்து, படகுடன் தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், மீனவா்கள் 7 பேரும் மன்னாா் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 7 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்களை வருகிற 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் வலியுறுத்தினா்.