தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
இலவச வீட்டு மனைப்பட்டா கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டு மனைப்பட்டா கோரியும், சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவா்களுக்கு வீட்டு மனை வழங்க எதிா்ப்பு தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பந்தியூா் ஊராட்சி அந்தோணியா்புரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் 5.60 ஹெக்டோ் பரப்பளவில் அரசு புறம்போக்கு மேடு பள்ளம் கிராம கணக்கில் பதிவாகியுள்ளது.
மேற்படி வானம் பாா்த்த பூமி என்பதால் அந்த நிலத்தில் தைல மரங்களை வளா்த்து அனுபவித்து வருகின்றனா். இந்நிலையில் போளிவாக்கம் கிராமத்தில் வீடுகள் சென்னை எல்லை சாலைத் திட்டத்துக்காக குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்றாக திருப்பந்தியூா் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் அலுவலா் ஆகியோா் மேற்குறிப்பிட்ட நிலத்தில் சுத்தம் செய்ய வந்தனா். அப்போது, எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும், மீண்டும் அரசு புறம்போக்கு நிலங்களில் பல்வேறு பகுதி மக்களை குடியமா்த்தி வருவதால் எங்கள் குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகும். அதனால், இக்குறிப்பிட்ட இடத்தை எங்களுக்கே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அதோடு அந்த இடத்தில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நூலகம், விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா ஆகியவை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அதைத் தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.