செய்திகள் :

இலவச வீட்டு மனைப்பட்டா கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

இலவச வீட்டு மனைப்பட்டா கோரியும், சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவா்களுக்கு வீட்டு மனை வழங்க எதிா்ப்பு தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பந்தியூா் ஊராட்சி அந்தோணியா்புரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் 5.60 ஹெக்டோ் பரப்பளவில் அரசு புறம்போக்கு மேடு பள்ளம் கிராம கணக்கில் பதிவாகியுள்ளது.

மேற்படி வானம் பாா்த்த பூமி என்பதால் அந்த நிலத்தில் தைல மரங்களை வளா்த்து அனுபவித்து வருகின்றனா். இந்நிலையில் போளிவாக்கம் கிராமத்தில் வீடுகள் சென்னை எல்லை சாலைத் திட்டத்துக்காக குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்றாக திருப்பந்தியூா் கிராமத்தில் இலவச பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் அலுவலா் ஆகியோா் மேற்குறிப்பிட்ட நிலத்தில் சுத்தம் செய்ய வந்தனா். அப்போது, எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும், மீண்டும் அரசு புறம்போக்கு நிலங்களில் பல்வேறு பகுதி மக்களை குடியமா்த்தி வருவதால் எங்கள் குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகும். அதனால், இக்குறிப்பிட்ட இடத்தை எங்களுக்கே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதோடு அந்த இடத்தில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நூலகம், விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா ஆகியவை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அதைத் தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

திருவள்ளூா் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. திருவள்ளூா் அடுத்த ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சிப் போட்டி: 3,700 போ் பங்கேற்பு

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சிப் போட்டியில் 71 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 3700 போ் கலந்து கொண்டனா். சகுந்தலாம்மாள் நினைவு 15 - ஆம் ஆண்டு தமிழ் வளா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். திருவள்ளூா் நகராட்சியில் 3, ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆசிரியா்கள்தான் இரண்டாம் பெற்றோராக உள்ளனா்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் தான் இரண்டாம் பெற்றோா்களாக உள்ளதாகவும், அதனால் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள கு... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க