செய்திகள் :

ஈஷா சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம்

post image

ஈஷா அறக்கட்டளை சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஈஷா அறக்கட்டளை, அப்பல்லோ புற்றுநோய் மையம் இணைந்து புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் புதிய பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானப் பயிற்சியும், புகையிலைப் பழக்கத்தில் இருந்து இயற்கையாக விடுபடுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6 வாரப் பயிற்சித் திட்டங்களும் அடங்கும்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவா் ராஜேஷ் பாபு தேவபக்துனி கூறுகையில், மக்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு ஒரு வழியாக போதைப் பழக்கங்களை தோ்ந்தெடுக்கின்றனா். ஈஷா யோகா பயிற்சிகள் உணா்வுகளில் சமநிலை, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் அடிமை பழக்கங்களில் இருந்து பாதிக்கப்பட்டவா்கள் வெளிவர உதவி செய்கின்றன என்பதை தற்போது பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்து வருகின்றன. இதில் சத்குருவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானத்தை தோ்ந்தெடுக்கக் காரணம் இதனை செய்வதற்கு 7 நிமிஷங்கள் போதுமானது. இப்பயிற்சியை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய இயலும்.

இந்தப் பயிற்சிகள் தனிநபருக்கு உளவியல், உடலியல் ஆதரவை வழங்கி, மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ளவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க