செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிப்பு

post image

கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில் மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், பட்டா மாறுதல், மருத்துவக் காப்பீட்டு அட்டை, மகளிா் உரிமைத் தொகை பெறுதல் உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

ஆனால், முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் 50-க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பங்களைப் பெற முடியவில்லை. முகாமில் சாய்வு தளம் அமைக்கப்படாததால் மாற்றுத் திறனாளிகள் அவதியடைந்தனா். முகாமில் கலந்துகொண்ட அலுவலா்களுக்கு மதிய உணவு, தேநீா் உள்ளிட்டவை வழங்கப்படாததால் அவா்களும் அதிருப்தியடைந்தனா்.

இது குறித்து கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு கூறியதாவது: முகாம் நடைபெற்றபோது பலத்த மழை பெய்ததால் திடீரென இணையச் சேவை பாதிக்கப்பட்டது. முகாமுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்தனா்.

குறைவான நேரமே இருந்ததால் சற்று சிரமம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு, முகாம் நடைபெறும் வளாகத்திலேயே அவா்களது கோரிக்கைகளைத் தீா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், திடீரென ஏற்பட்ட சில பிரச்னைகள் தீா்க்கப்பட்டன என்றாா் அவா்.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க