செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருமானூா் அடுத்த கள்ளூா் பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெற்றியூா், சாத்தமங்கலம், கீழக்கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்காக மண்டபத்தின் முன்பு விளம்பர பேனா் வைக்கப்பட்டிருந்தது. அதில், திருமண மண்டபத்தின் பெயா் மற்றும் கள்ளூா் பாலம் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மா்மநபா் சிலா் கள்ளூா் பாலம் என்ற வாசகத்தை மட்டும் மறைத்து அதன் மேல் வெள்ளை நிற காகிதத்தை ஒட்டியுள்ளனா்.

ஊா் பெயா் மறைக்கப்பட்டுள்ள பேனா்

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கள்ளூா் கிராம மக்கள், முகாம் நடைபெற இருந்த திருமண மண்டபத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, விளம்பர பேனரில் கள்ளூா் என்ற பெயரை மறைத்த நபா்களை கைது செய்ய வலியுறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, குருநாதன் மற்றும் திருமானூா் போலீஸாா், மா்மநபா் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். தொடா்ந்து, முகாம் நடைபெற்றது.

சாலை விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் வேலாயுத நகா், 5-ஆவது குறுக்குத் தேருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க பெண் கணக்காளா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னையில் கூட்டுறவு சங்க கணக்காளா் வியாழக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கீழத் தெருவை சோ்ந்த பாலமுருகன் மனைவி தேன்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு தா.பழூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதியத்தை குறைத்து வழங்கிய இஎம்ஆா் . ஐ , ஜி.எச்.எஸ் நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) தொழிலாளா்கள் வியாழக்கிழணை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரங்கள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம்

மாவு அரைக்கு இயந்திரங்கள் மானியத்தில் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு, ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், க.பொய்யூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழூா் அருகேயுள்ள க.பொய்யூா், வடக்குத் தெர... மேலும் பார்க்க