செய்திகள் :

உறவினரை கொன்ற இளைஞருக்கு ஆயுள்தண்டனை

post image

தூத்துக்குடி மாவட்டம், புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், உறவினரைக் கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதூா் பிரதான சாலை அருகே, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகனை (40), குடும்ப பிரச்னை காரணமாக அவரது உறவினரான விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் அற்புதசெல்வம் என்ற ஆஸ்வின் (33) கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இந்த வழக்கில், புதூா் போலீஸாா் அற்புதசெல்வம் என்ற ஆஸ்வினை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா, குற்றம்சாட்டப்பட்ட அற்புதசெல்வம் என்ற ஆஸ்வினுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்... மேலும் பார்க்க