செய்திகள் :

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்: பவன் கல்யாண்

post image

அநீதியை அழித்ததாலும், அனைவரையும் சமமாக நடத்தியதாலும் உலகின் முதல் புரட்சித் தலைவராக முருகன் உள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என சிலர் பேசுவதாகவும், அரேபியாவில் இருந்து வந்த மதம் பற்றி பேச முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பவன் கல்யாண் பேசியதாவது,

உலகம் முழுவதும் பரந்து நிறைந்துள்ளார் முருகன். இருந்தாலும் அவர் பாதம் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், இந்த மண்ணை வணங்குகிறேன். அந்தக் காரணத்தாலேயே தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடக்கிறது.

சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; இந்து மதத்தில் நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ணர் கருப்பு, காளியும் கருப்பு.

ஆனால், நிறத்தை வைத்து முருகனை சீண்டி பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை சிலர் கிண்டல் செய்கின்றனர். கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதச்சார்பின்மை என்கின்றனர்.

அரசமைப்பு கொடுத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்ற வேண்டும்.

மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? அவர்களால் மற்றவர்கள் பற்றி இது போல பேச முடியுமா? எனது உரிமையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது? அதை நீங்கள் கேள்வி கேட்கலாமா? அரேபியாவில் இருந்து வந்த மதம் பற்றி பேச முடியுமா?

மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு: தமிழிசை உள்ளிட்ட பயணிகள் அவதி

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை புறப்பட்ட விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாஜக மேலிட பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செள... மேலும் பார்க்க

அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு

தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொ... மேலும் பார்க்க

கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ. 487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா் என்று மக்கள் ... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில், இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், ஆந்திர துணை மு... மேலும் பார்க்க

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலை

இந்துக்களுக்கு பிரச்னை; வாழ்வியல் முறையை மீட்கவே மாநாடு: அண்ணாமலைஇந்து வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காகவே முருகன் மாநாடு நடத்தப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்துக்களுக்... மேலும் பார்க்க