செய்திகள் :

எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

post image

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்றால் விரைவில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

இதற்கு, சமூக வலைதளத்தில் எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை வரலாற்றில், ஆஸ்திரேலிய யூதர்களுக்கு துரோகம் செய்த பலவீனமான அரசியல்வாதியாகவே நினைவுக்கூரப்படுவார் எனப் பதிவிட்டார்.

இந்தப் பதிவுக்கு, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நெதன்யாகு வலிமையையும் மக்களைக் கொல்வதையும் ஒப்பிடுகிறார் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்கே விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில்:

“வலிமை என்பது எத்தனை பேரை உங்களால் வெடிக்க வைக்க முடியும் அல்லது எத்தனை குழந்தைகளை உங்களால் பட்டிணியிட முடியும் என்பதன் மூலம் அளவிட முடியாது.

இஸ்ரேல் விரும்பாத ஒரு முடிவை, பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் எடுத்ததன் மூலம், அவரது வலிமை மிகவும் சிறப்பாகவே அளவிடப்படுகிறது. எங்களது நோக்கம் என்ன, நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை அவர் நேரடியாக, நெதன்யாகுவிடம் கூறுகிறார்” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் மற்றும் நிவாரணப் பொருள்களின் முடக்கம் ஆகியவற்றினால் நீண்டகால நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா - இஸ்ரேல் இடையிலான உறவில் விரிசல் உண்டாகியுள்ளது.

மேலும், போர்நிறுத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

The country's Home Affairs Minister hits back to the Israeli Prime Minister's comment that Australian Prime Minister Anthony Albanese is weak.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அ... மேலும் பார்க்க

போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்!

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில... மேலும் பார்க்க

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொண்டு, அப்பகுதியை இரண்டாகப் பிரிக்கக் கூடிய சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்குப்... மேலும் பார்க்க

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. ஹெராத் மாகாணத்தின், குஸாரா மாவட்டத்தில் ஈரானில் இருந்து தாயகம் தி... மேலும் பார்க்க

பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிக... மேலும் பார்க்க

ஆப்கனில் பேருந்து தீப்பிடித்தது: 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா முத... மேலும் பார்க்க