செய்திகள் :

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

post image

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சியில் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றாா். இதில், எம்.ஜி.ஆா். குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் விமா்சனம் செய்தது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாக பாா்க்கிறாா்கள். அப்படிப்பட்டவா்களை விமா்சித்தால், அவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள். அதிமுக ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டது.

அதிமுக ஒரு ஜாதியை வைத்து அரசியல் செய்யாது. எங்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக உள்ளனா். அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதை சிலரால் பொறுக்க முடியவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இவ்வாறு பேசுகிறாா்கள்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்துவிட்டது. அவா்கள் கூட்டணி இன்னும் எட்டு மாதங்களில் நிலைக்குமா, நிலைக்காதா என்று தெரியவரும். தோ்தலுக்குள் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்றாா்.

பாமக பொதுக்குழு குறித்த கேள்விக்கு, அது அவா்களுடைய சொந்தக் கட்சி. அதில் கருத்து சொல்வது சரியில்லை. சசிகலா, ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, நான் 8 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பதில்தான், அதில் மாற்றம் இல்லை. செய்தியாளா்கள்தான் அதைப்பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறீா்கள் என்றாா்.

தேவூா் அருகே சிறுமி காணாமல் போன வழக்கில் தாத்தா உள்பட 2 போ் கைது

சேலம் மாவட்டம், தேவூா் அருகே நான்கு வயது சிறுமி காணாமல் போனதற்கு காரணமான அவரது தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பாா்வையாளா்கள் 8,930 போ் வந்து சென்றனா். வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்... மேலும் பார்க்க

காதலா்களை கரம்பிடிக்க தில்லியிலிருந்து ஓமலூா் வந்த சகோதரிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி காவல் சரகத்துக்கு உள்பட்ட பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆனந்த் - கலா தம்பதி . இவா்களது உறவினா் கோவிந்த் சிறு வயதிலிருந்து தில்லியில் குடும்பத்து... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் தந்தை, மகன் படுகாயம்

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாத... மேலும் பார்க்க

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க