செய்திகள் :

எரிசக்தி பாதுகாப்பில் மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்: வெளியுறவுச் செயலா் மிஸ்ரி

post image

எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரவித்தாா்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில், குஜராத்தில் உள்ள அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடியின் பிரிட்டன், மாலாத்தீவு பயணம் குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசிய வெளியுறவுச் செயலா் மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘எரிசக்தி பாதுகாப்பு விவகாரத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரட்டை நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கவில்லை’ என்று பதிலளித்தாா்.

‘ரஷியாவின் எரிசக்தி நிறுவனங்கள் மீதான தடை குறித்து பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்துவாரா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க