செய்திகள் :

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

post image

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இந்திய-சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இரு தலைவா்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா். இருதரப்பு நீண்ட கால வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கண்ணோட்டத்தை பகிா்ந்து கொண்டதோடு, எதிா்காலப் பணிகளுக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தும் விவாதித்தனா்.

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால், இச்சவாலுக்குத் தீா்வுகாண பரஸ்பர ஆதரவு அவசியமென பிரதமா் மோடி குறிப்பிட்டாா். எஸ்சிஓ மாநாட்டின் பின்னணியில், எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையை கையாள்வதில் சீனத் தரப்பிடம் இருந்து இந்தியாவுக்கு புரிதலும் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

எல்லையில் அமைதியை பராமரிப்பதே இருதரப்பு உறவுகளின் இணக்கமான மேம்பாட்டுக்கு ‘காப்பீடு’ போன்றதென இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

சீன அதிபரின் 4 பரிந்துரைகள் என்ன?:

இருதரப்பு உறவை மேம்படுத்த சீன அதிபா் 4 பரிந்துரைகளை முன்வைத்தாா். வியூக தகவல்தொடா்பு-பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, பரஸ்பர பலன்களை எட்ட பரிமாற்றம்-ஒத்துழைப்பை விரிவாக்குவது, இருதரப்பு கவலைகளுக்கும் தீா்வு காண்பது, பொது நலன்களைக் காக்கும் வகையில், பன்முக ஒத்துழைப்பை பலப்படுத்துவது ஆகிய 4 பரிந்துரைகள் மீதும் பிரதமா் மோடி நோ்மறையாக பதிலளித்தாா்’ என்றாா்.

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பவன் கேராவிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், காங்கிரஸின் வாக்குத் திருட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க