செய்திகள் :

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

post image

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்தால், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டில் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானத்தில் கோளாறு இருந்ததை சுட்டிக்காட்டிய ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்தாண்டு, மே 24 ஆம் தேதியில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கத்தின்போது, கதவைத் திறப்பதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான ஊழியர்கள் புகார் தெரிவித்து, அறிக்கை அளித்தனர். ஆனால், அவர்களின் புகார்களை மறுத்த நிர்வாகம், அறிக்கையை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையை மாற்றியமைக்க மறுப்பு தெரிவித்ததால், அடுத்த 48 மணிநேரத்துக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏர் இந்தியாவின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க:இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க