செய்திகள் :

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

post image

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.

இரண்டு பயணிகள் மீது கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றது. உடனே அவர்கள் இது குறித்து விமான சிப்பந்திகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து அந்தப் பயணிகள் இரண்டு பேரையும் அந்த இருக்கையிலிருந்து வேறு இருக்கையில் இடம் மாறி அமரச் செய்தனர்.

விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அந்நேரம் ஏர் இந்தியா ஊழியர்கள் விமானத்தில் வேறு ஏதாவது பூச்சிகள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் விதமாக விமானம் முழுக்க முழு அளவில் சுத்தம் செய்தனர்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

சுத்தம் செய்யப்பட்ட பிறகு விமானம் தாமதம் இன்றி புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவத்தால் பயணிகள் மத்தியில் ஒரு வித சலசலப்பு ஏற்பட்டது. விமானத்தில் கரப்பான் பூச்சி புகுந்ததை ஏர் இந்தியா நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.

விமானம் தரையில் நிற்கும்போது எதாவது ஒரு வழியில் பூச்சிகள் உள்ளே வந்து விடுகின்றன என்றும், நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட தூர ரயில்களில்தான் கரப்பான் பூச்சித்தொல்லை அதிகமாகக் காணப்படுவது வழக்கம். இப்போது விமானத்திலும் கரப்பான் பூச்சித்தொல்லை ஆரம்பித்து இருக்கிறது.

அகமதாபாத்தில் சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அடிக்கடி நிறுத்தப்படுவது அல்லது தாமதமாகப் புறப்படுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

Eng v Ind : `டெஸ்ட் போட்டினா இதுதான்.!’ - இந்தியாவின் த்ரில் வெற்றியின் திக் திக் மொமென்ட்ஸ் | Album

Eng v Ind | இந்தியாEng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind E... மேலும் பார்க்க

Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழும் தம்பதி - எப்படி?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் ... மேலும் பார்க்க

Trending: உலகின் வயதான குழந்தை - எப்படி நிகழ்ந்தது இந்த அறிவியல் அதிசயம்? | விரிவான தகவல்கள்

அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..? லிண்ட்சே , டிம... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்! | Photo Album

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க

Agaram: "படிச்சா போதும்னு அண்ணன் சொல்லுவாரு; அண்ணி..." - அகரம் மேடையில் கார்த்தி கலகல

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க