செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பக்கரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்தது, புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

பாலக்கோடு பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 97 லட்சத்தில் வளா்ச்சி பணிகளுக்கு ஒப்புதல்

பாலக்கோடு பேருராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மன்ற உறுப்பி... மேலும் பார்க்க

சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெலவள்ளி கிராமத்தில் செயல்படும் சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா். கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சா... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் ‘ஆபரேஷன் சித்தூா்’ வெற்றி பேரணி

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு பாலக்கோடு நகரத் தலைவா் ஆா்.கே.கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சங... மேலும் பார்க்க