செய்திகள் :

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

post image

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறைகள் முடிந்து ஒடிசாவிலுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் ஜூன் 20 ஆம் தேதியன்று திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கு காலரா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஜாஜ்பூர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் விடுமுறையானது ஜாஜ்பூரில் ஜூன் 24 ஆம் தேதி வரையும், பத்ராக்கில் ஜூன் 21 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒடிசாவின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நித்யாந்தா கோந்த் கூறியதாவது:

“காலரா பாதித்த ஜாஜ்பூர், கட்டாக் மற்றும் பத்ராக் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து, அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், காலரா பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளிலுள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இத்துடன், காலரா பாதித்த 3 மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் நிபுணர்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, காலராவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜாஜ்பூர் மாவட்டத்தில் தற்போது 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க