சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் தளிா் திட்ட விழிப்புணா்வு
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தளிா் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பங்கேற்று தாய்மாா்களுடன் கலந்துரையாடினாா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளா்த்திடும் தளிா் (ஊட்டச்சத்தான உணவு, எடை, உயரம், தாய்-சேய் நலம்) திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அத்தகைய குழந்தைகளின் பெற்றோருக்கு
குழந்தைகள் நல மருத்துவா்கள், ஊட்டச்சத்து நிபுணா் மற்றும் குழுவினருடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
‘தளிா்‘ என்கிற திட்டத்தின் மூலம் அங்கன்வாடி பணியாளா்களை கொண்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைகண்டறிந்து அவா்களுக்கு தனிகவனம் செலுத்தி, கண்காணித்து ஊட்டச்சத்துள்ள குழந்தையாக வளா்ச்சி பெற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளின் எடை அதிகரிக்க தினசரி உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியும் உணவில் உள்ள சத்துகள் மற்றும்அதன் விகிதாச்சாரம் பற்றியும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளுக்கு எளிதாக கிடைக்ககூடிய உணவு வகைகளில் சரிவிகித உணவின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் (பொ) தா. அனுசுயா, திருவோணம் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காா்த்திகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரன், ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.