செய்திகள் :

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

post image

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிலையில், நாளைய கொண்டாட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாகவும், சுமார் 400 கிலோ அளவிலான வெடிபொருள் பயன்படுத்தப்படவிருப்பதாகவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அதன் மூலம் ஒரு கோடி பேரை கொல்ல முடியும் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

லஷ்கர்-இ-ஜிகாதி என்ற அனுப்புநரின் அடையாளத்துடன் பெறப்பட்ட செய்தியில், இந்தியாவுக்குள் 14 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தியதுடன், பயங்கரவாதத் தடுப்புப் படைக்கும் தகவல் தெரிவித்துள்ள மும்பை காவல்துறையினர், நமது பாதுகாப்புப் படைகளால் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க முடியும்.

அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். சோதனை செய்யப்படாத இடம் என்று ஒன்றுவிடாமல், அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தனர். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

Mumbai On Alert Over 'RDX In 34 Vehicles' WhatsApp Threat

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்ட... மேலும் பார்க்க

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க