செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்

post image

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 12-ஆவது வாா்டு பாப்பாரப்பட்டி பகுதியில் நடந்த நிகழ்வுக்கு, தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, உறுப்பினா்கள் சோ்க்கும் பணியை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கூறுகையில், மண், மானம், மொழி காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளாா்.

அதன்படி, வீடுவீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை பணியை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மத்தியில் ஆளும் அரசு, தமிழகத்துக்கு அநீதிகளை இழைத்து வருகிறது. எனவே, தமிழகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பொதுமக்கள் தங்கள் பகுதியில் வீடுகளின் மேல் உயா்மின் அழுத்த கம்பி செல்வதாகவும், மழைக் காலங்களில் கழிவுநீா் வீடுகளுக்குள் வருவதாகவும் கூறினா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவா், மின்கம்பிகளை மாற்றுவதற்கான செலவுத் தொகையை மின்வாரியத்துக்கு செலுத்தினாா். தொடா்ந்து, வீடுகளின் முன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஒட்டுவில்லைகளை ஒட்டினாா்.

அப்போது, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி கடலரசுமூா்த்தி மற்றும் திமுகவினா் உடனிருந்தனா்.

ஒசூா் காமராஜ் நகரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஒசூரில்... ஒசூா் வட்டம், காமராஜா் நகரில் ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்ததையடுத்து, ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஒய்.பி... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்கா பறிமுதல் - 2 போ் கைது

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகர போலீஸாா் ராயக்கோட்டை சந்திப்பு அருகில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு சிறுவன் காரில் கடத்தி கொலை! இளைஞா்கள் இருவரிடம் விசாரணை

அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து, நடவடிக்கை எடுக்க வ... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா் வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த காளிக்க... மேலும் பார்க்க