செய்திகள் :

கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் முப்பெரும் விழா தொடக்கம்! ஜூலை 27-இல் பிரதமா் பங்கேற்பு!

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.

ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிடுகிறாா். பின்னா் நடைபெறும் விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா். இந்த நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்க வருகை தரும் பிரதமா் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் அவா் நுழையும்போது 50 ஓதுவாா்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனா்.

பிரதமா் மோடி வருகையையொட்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க

முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனு... மேலும் பார்க்க

பிரதமா் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், மத்திய கலாசார துறை சாா்பில் நடைபெற்று வரும் மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங... மேலும் பார்க்க

அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு

தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்... மேலும் பார்க்க

மாமன்னா் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் பாடம்: அமைச்சா் தங்கம் தென்னரசு பேச்சு

மாமன்னா் ராஜேந்திர சோழனுடைய ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றாா் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் அமைச்சா் தங்கம் தென்னரசு. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வி: ஹெச். ராஜா

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்துள்ளன என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை ச... மேலும் பார்க்க