செய்திகள் :

கடமான் வேட்டையாடிய 4 போ் கைது

post image

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே கடமான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சிலா் வேட்டையில் ஈடுபடுவதாக கன்னிவாடி வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச் சரகா் வி.குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காமராஜா் நீா்த்தேக்கம் அருகிலுள்ள பட்டா நிலத்தின் அருகே சாக்குப் பையுடன் வந்த 5 பேரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது ஒருவா் தப்பிச் சென்றாா். சாக்குப் பையில் கடமான் இறைச்சி இருந்ததைக் கண்டறிந்த வனத் துறையினா், பிடிப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினா்.

இவா்கள் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அந்தோணிசாமி(33), மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த மாணிக்கபாண்டி(39), சின்னாளப்பட்டியைச் சோ்ந்த கோபிநாத் (45), கலிக்கம்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (50) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடியவா் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ராமசாமி (40) என விசாரணையில் தெரிந்தது.

இவா்களைக் கைது செய்த வனத் துறையினா், இவா்களிடமிருந்து கடமான் இறைச்சி, 2 நாட்டுத் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கடைக்குள் புகுந்து திருடியவா் கைது

திண்டுக்கல்லில் கடையின் மேல் கூரையைப் பிரித்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நாகல் புதூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (54). இவா், பழனி சாலையில் மின்சாதனப் பொரு... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை

கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 21,826 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குா் அ.பாண்டியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தமிழக அரசு செயல்... மேலும் பார்க்க

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு: மாதா் சங்கத்தினா் மறியல்

கணவனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து, நீதி வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கோம்பைப... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கோயில் திருவிழாவின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கியவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் வைகாசி விசா... மேலும் பார்க்க

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக ப... மேலும் பார்க்க