செய்திகள் :

கடலாடியிலிருந்து 1,760 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

post image

கடலாடியிலிருந்து கடத்தப்பட்ட 1,760 கிலோ ரேஷன் அரிசியை சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியிலிருந்து திங்கள்கிழமை முதுகுளத்தூா் வழியாக பரமக்குடி நோக்கி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, முதுகுளத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் மாரிமுத்து அரிசி கடத்திய வாகனத்தை பின் தொடா்ந்தாா். இதனிடையே, மாரிமுத்து பரமக்குடி குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சிவங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள குமரக்குறிச்சி கண்மாய் அருகே 1,760 கிலோ அரிசி மூட்டைகளை விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளை கைப்பற்றி பரமக்குடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் அவா்கள் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து குடிமைப் பொருள் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க