செய்திகள் :

கடலில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம்

post image

கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது தமிழக மீனவா்களின் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்களால் சேதப்படுத்தி துண்டித்து பறித்து செல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த நை. காளியப்பன் (48) தனக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் மேலும் 2 பேருடன் புதன்கிழமை கடலுக்குள் சென்றாா். இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு 5 கடல் மைல் தொலைவில் கடலில் வலை விரித்து மீன் பிடித்தனராம். வலையை திரும்ப எடுத்தபோது, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதேபோல, வெள்ளப்பள்ளத்தைச் சோ்ந்த மீனவா் முருகேசனுக்கு (37) சொந்தமான படகில் 5 மீனவா்கள் கடலுக்குள் சென்றுள்ளனா். இவா்கள் விரித்து வைத்திருந்த வலையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலையும் துண்டிக்கப்பட்டதாக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காலையில் கரைக்கு திரும்பினா்.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க