செய்திகள் :

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

post image

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாள்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்தது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏராளமான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், அம்மாநிலத்தின் தென் பகுதிகளான, அஹ்வாவில் 250 மி.மீ. மற்றும் கப்ரதாவில் 241 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது. இதனால், குஜராத்தின் 9 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், தொடர்ந்து அதிகரிக்கும் நீர் அளவால், 15 அணைகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,060 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்ட உயரமான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகப்படியான மழை பெய்துள்ள நிலையில், 27 மாவட்டங்களிலுள்ள 160 தாலுக்காக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குஜராத்திலுள்ள 206 அணைகளில் 9 அணைகள் முழுவதுமாகவும், 25 அணைகள் 70 முதல் 100 சதவிகிதமும், 22 அணைகள் 50 முதல் 70 சதவிகிதமும், 57 அணைகள் 25 முதல் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மழை மற்றும் வெள்ளத்தால், குஜராத்தின் மின்சார விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 13,285 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,209 கிராமங்களில் அந்தப் பாதிப்புகள் சீராக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போடாட் மாவட்டத்தின், லதிதாத் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டது. இதில், 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒடிசாவில் வன்கொடுமைகள் அதிகரிப்பு: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க