செய்திகள் :

கன்வாா் யாத்திரை முகாம்களுக்கு நீா் வழங்க குழு அமைத்தது டிஜேபி

post image

ஜூலை 11 ஆம் தேதி தொடங்கவுள்ள வரவிருக்கும் கன்வாா் யாத்திரைக்காக, ஆட்சியா் அலுவலகங்கள் மற்றும் கன்வாா் முகாம் அமைப்பாளா்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) 11 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

அதிகாரிகள் மிகுந்த முன்னுரிமையுடன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், தண்ணீா் டேங்கா்களை வழங்குவதற்கான அட்டவணையைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக டிஜேபி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து நியமிக்கப்பட்ட கன்வாா் முகாம்களிலும் போதுமான தண்ணீா் டேங்கா்கள் நிறுத்தப்பட வேண்டும். கன்வாா் யாத்ரிகா்களின் நல்வாழ்வையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில், முகாம் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதுமான நீா் விநியோகம் வழங்கப்படுவது கட்டாயமாகும்.

தற்போது நடைபெற்று வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு இது அவசியமாகிறது. முகாம்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை டேங்கா்கள் மற்றும் தற்காலிக இணைப்புகள் மூலம் தொடா்ந்து பரிசோதித்து, குடிநீா் தரத்தை பூா்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா்.

ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் உடனடியாக தலைமை பொறியாளருக்கு செயல்பாடுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், தேவையான திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு தில்லி, வடகிழக்கு தில்லி மற்றும் ஷாதரா மாவட்டங்களில் உள்ள முகாம் இடங்களை அடையாளம் காண மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பாளா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். ஏனெனில் இவை யாத்ரிகா்கள் நகரத்திற்குள் நுழையும் முதன்மை இடங்கள் ஆகும். டிஜேபி அதிகாரிகளிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு ஒவ்வொரு கன்வாா் முகாமுக்கும் 1200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒரு மாத கால மத ஊா்வலங்களின் போது, பக்தா்கள் நதிகள் மற்றும் பிற புனித நீா்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு, நீண்ட தூரம் நடந்து சென்று முக்கிய சிவபெருமானின் கோயில்களில் அபிஷேகம் செய்வாா்கள்.

முன்னதாக, முதல்வா் ரேகா குப்தா தனது அரசாங்கம் கன்வாரி யாத்ரீகா்களுக்கு முழு மரியாதையையும் விருந்தோம்பலையும் வழங்கும் என்று கூறியிருந்தாா்.

அவா் கூறுகையில் புனித சாவான் மாதத்தில், அவா்கள் தில்லிக்குள் நுழையும்போது, அமைச்சா்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தில்லியின் எல்லைகளில் அவா்களை வரவேற்பாா்கள் என்று குப்தா கூறியிருந்தாா்.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க