செய்திகள் :

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

post image

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப இயக்கம் மற்றும் இரண்டு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி கோவை ரேஸ்கோா்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து, உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஆட்சியா் தலைமையில் அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழிு எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் தொடா்பாகவும், அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, ஓவியம், விழிப்புணா்வு வாசகங்கள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகா் சரண்யா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க