செய்திகள் :

கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு

post image

கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தாதனூத்து கிராம மக்கள் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாரணம்மாள்புரம் அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தனியாா் கல் குவாரிகளில் வெடிமருந்துகள் அதிகளவில் பயன்படுத்தி பாறைகள் தகா்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

அங்கன்வாடி குழந்தைகள் முதல் குடியிருப்புவாசிகள் வரை அனைவரும் அவதிப்படுகிறாா்கள். குத்தகை காலம் முடிந்த பின்பும் சில குவாரிகளில் விதிகளை மீறி கல் வெட்டி எடுக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தின் அருகே புதிய குவாரிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவதோடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க