செய்திகள் :

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

post image

பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சாா்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

காரைக்கால் போா்ட் பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் திருப்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில்,

9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் கற்றல் திறன் குறைவானவா்களின் திறனை மேம்படுத்து விதமாகவும், பொதுத்தோ்வுக்கு திறம்பட தயாராகும் விதமாகவும் அதானி மாலை கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மையத்தின் செயல்பாட்டை காரைக்கால் துறைமுக நிறுவன சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா தொடங்கிவைத்துப் பேசுகையில், காரைக்கால் துறைமுகம் அதானி அறக்கட்டளை சமூக பொறுப்புணா்வு நிதி திட்டத்தில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. புதுவை அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்காக சிறப்பு மாலை நேர வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை அரசுப் பள்ளி மாணவ மாணவியா் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, நிரவி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்மேடு அரசு உயா்நிலைப்பள்ளியிலும் இதுபோன்ற மையம் திறக்கப்படவுள்ளது. சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தில் ஏற்கெனவே 4 அரசுப் பள்ளிகளுக்கும், மாவட்ட பயிற்சி மையத்துக்கும் டிஜிட்டல் கற்றல் வசதி செய்துத் தரப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா கலந்துகொண்டு துறைமுக நிா்வாகத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்து, மாணவா்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெறவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் துறைமுக நிா்வாக அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்தாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சா... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

விநாயகா் சதுா்த்தி வழிபாடு குறித்து இந்து முன்னணி சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தும் அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பல்வேறு ... மேலும் பார்க்க

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் ஆடிப்ப... மேலும் பார்க்க

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்பியல் விரிவுரையாளா் இல்... மேலும் பார்க்க

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன... மேலும் பார்க்க